திரைப்படத்தில் காட்டுகிறார்கள் ஒரு பெண்ணை நண்பர்களாக சென்றவர்கள் பாலாத்கரமாக கெடுத்து உயிர் போகிறது . படங்களில் தொலைக்காட்சிகளில் திராவகம் வீசுவதை காட்டுகிறார்கள் . இது மனித மனதை நன்மையை விட கெடுதல் அதிகமாக விளைவிக்கின்றது .தமிழ் சினிமா இவ்வாரான கொடூரங்களை ஊக்குவிக்கின்றன. அது தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கிறது.
ஒன்றிரண்டு நல்ல திரைப்படங்களைத் தவிர காதல், தாலி சென்டிமென்ட், அரிவாள், தீவிரவாதம் இதைத் தாண்டி தமிழ் சினிமா எதைத்தான் அறிவுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறது ? இவ்வாறான திரைப்படங்களில் ஊறி வளர்ந்த ஒரு இளைஞனிடம் இதைப் போன்ற வன்முறையைத் தவிர வேறெதனை எதிர்பார்க்க முடியும்?
பயங்கரமான குற்றம் இழைத்தவனுக்கும் அவனது நோக்கம் (motive or intention )அவனுக்கு உயிரைப் போக்க வேண்டுமென்ற எண்ணமில்லை பாதிப்பு ஏற்பட வேண்டுமென்ற எண்ணம்தான் என்றும் வாதாடலாம் ) பாதுகாப்பும் கொடுத்து சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டு அவனை பாதுகாப்பு கொடுத்து விடுகின்றது. விவாதம் என்ற போர்வையும் அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து விடுகின்றது. சிலர் ஆண் ஆதிக்கமென்று பேசி திசையை மாற்றுகிறார்கள். மரண தண்டனை கொடுத்ததால் மட்டும் திருந்தி விட்டார்களா இவ்விதம் பேசி தீர்வின் முடிவை ஆராய்கின்றார்கள்.
கைக்கு கை, கண்ணுக்கு கண், உயிருக்கு உயிர் கொடுமையானதாக தென்பட்டது.
பாதிக்கப் பட்ட பெண்ணே சொல்கிறாள் என்னைப்போல் அவனும் கஷ்டப்பட வேண்டுமென்று.
”வாழணும்னு ஆசையா இருக்கு” – ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான விநோதினியின் கடைசிக் குரல்!
அவனுக்கு உயிரைப் போக்க வேண்டுமென்ற எண்ணமில்லை பாதிப்பு ஏற்பட வேண்டுமென்ற எண்ணம்தான் என்றும் வாதாடலாம்
தீர்ப்பு வரவும் கால தாமதமாகின்றது
“ஆஸிட் வீச்சின் வலியையும் வேதனையும் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அவள் ஏன் அப்படிச் சொல்கிறாள் என்று. அவன் மேலும் ஆஸிட் வீச வேண்டும் என்று அவள் கூறியிருப்பது துன்பத்தின் உச்ச கட்டத்தில். அவனை மன்னிக்க அவள் ஏசு கிறிஸ்து அல்ல. ஒரு சாதாரண மானிடப் பெண். எந்த ஒரு குற்றமும் செய்யாத, பெற்றோருக்கு நல்ல வாழ்வைத் தர நினைத்த பெண். அவள் கூறியதை வைத்து பட்டி மன்றம் நடத்த வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.
ஜோதி, ரிஸானாவைத் தொடர்ந்து இந்த வருடத்தின் ஆரம்ப காலங்களை திரும்பவும் துயரச் சலனங்களுக்குத் தள்ளி விட்டிருக்கும் இன்னுமொரு பெண் வினோதினி” .Lakshmi Chitoor Subramaniam


























“முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்.” என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர்.




