நீடூர்,பி. எம். ஆர். ஹாஜிரா பானு
கிணற்று மேட்டில் சாய்ந்து வானம் பார்த்தாள் சகினா. “அதே வானம்; அதே மேகம் ; அதே நிலவு.”
ஆனால்… இதே மாலை. ஆசர் வேளை; எவ்வளவு இன்பம் …. போன மாதம் எல்லாம் அத்தாவுக்கு அந்த ஜுரம் வரும் வரை. மூன்றே நாள் தனலாய்க் காய்ச்சல். மழை கொட்டிய அந்த விடியலின் கன்னி இருட்டில் தான் அவர்கள் வாழ்விலும் இருள் விழத் தொடங்கியது.
அன்றைய நாள், ஃபஜ்ரு பாங்கு சொன்னவுடன் எழுந்த சகினா, மழைத் தூறலைப் பொருட்படுத்தாமல் கிணற்றில் நீரிறைத்து சில்லென ஒலு செய்து, ஈரப்பாதம் தூசுபடாமல் குதிகால் பெருவிரல் ஊன்றி நடந்தவள் தந்தையின் கட்டிலருகே நின்றாள்.
“அத்தா எந்திரிங்க…”
எவ்வளவு ஜுரம், தலைவலியானாலும் ஒரு வக்த் தொழுகையைக் கைவிட்டு அப்துல்காதருக்குப் பழக்கமில்லை.
“நேரமாயிடுச்சாம்மா…” கேட்டபடி எழுந்தவர் “சகினா…!” என்றார் பதறியபடி.
“என்னாத்தா…?”
“என் கால் ரெண்டையும் அசைக்க முடியலியே…!” என்றார் கலவரமடைந்தவராக.
“தூங்கியிருக்கும்…!” சிரித்தபடி அவர் காலைத் தொட்டவள் திடுக்கிட்டாள். ஐஸ் கட்டிகளாய், கிள்ளினாலும் உணர்வில்லா மரக்கட்டைகளாய்…!
டாக்டரிடம் ‘ஓட’, வாதம் அடித்துவிட்டது என்றார்.
யார் யாரிடமோ சொல்லி, தினம் ஒரு டாக்டரிடம் காரில் அழைத்துப் போனதில், மகள் கல்யாணத்திற்குச் சேர்த்து வைத்திருந்த பணம் கரைய, அம்மாவும் கரைந்தாள்; ; ஓய்ந்தாள்!
அந்த ஊர் ஒரு ரெண்டுங்கெட்டான். தஞ்சை ஜங்~னை ஒட்டிய அல்லது சேர்ந்த முஸ்லிம்கள் நிறைந்த கிராமம். அப்துல் காதர் அங்கு பிரபல டெய்லர்.
வசிக்கும் வீடு சின்னதானாலும் ஜங்~ன் அருகே அவர் தொழில் பார்க்கும் சொந்தகடை சற்றுப் பெரியது தான்.
இவருக்குக் கீழே 4 டெய்லர்கள் வேலை செய்தார்கள். கை சுத்தம் ; நேர்மை! ஜங்~ன் மட்டுமில்லமால் டவுனிலும் அவருக்கு கஸ்டமர்கள். பொழுதுபோக்காய் எம்ப்ராய்டிங்கும் செய்ய, வாழ்க்கை கூட்ஸ் ரயிலாக இல்லாவிட்டாலும் கட்டை வண்டியாக இல்லாமலிருந்தது.
மூத்த பெண் சகினா தவிர, இப்போது 11 தேறியிருக்கும் முஜிப், நாலாம் கிளாஸ் நசீரா ஆகியோர் ஈன்ற செல்வங்கள்.
யார் பேச்சையும் பொருட்படுத்தாமல் சகினாவை ஜங்~ன் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்டூ படிக்க வைத்து, பின் அதே ஸ்கூலில் டைலரிங் கிளாஸ் சேர்த்து, அவளும் எல்லா நவீன டைலரிங்கிலும் தேர்ச்சி பெற…
அப்போது தான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது. சின்ன ஜவுளிக் கடைகளில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு முடிந்த துணி அவர்களிடமே எடுத்து, ஆர்டர்படி அதை ரெடிமேட் ஆடைகளாகத் தைத்துத் தருவது தான் அந்த ஐடியா.
பணச் செலவு இல்லை. வருடத்திற்கு ஆறேழு முறை ஆர்டர் கிடைத்தாலும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கொரு முறை கணிசமான பணம் வருமே…
எப்படியோ, யார் சிபாரிசோ… டவுனில் 3 சிறு கடைகளில் ஆர்டர் பிடித்த ஆறே மாதத்;தில் அவளுள் பெருமூச்செழ,
உள்ளிருந்து கேட்ட ஆண் குரலில் சிந்தனை கலைந்து எழுந்தாள்.
“டவுன்லயா இருக்கு கடை? நம்மூர்தானே. முடிவா பத்தாயிரம் தரலாம்…அப்புறம்…தையல் மெ~pனெல்லாம் இனிமே வீட்ல வச்சிக்கிட்டு என்ன செய்யப்போறீங்க… அதையும் நானே எடுத்துக்கிட்டா ….” கல்லு வீட்டு கப+ர் தான் அம்மாவிடம் கறாராய்.
“சரி…! ஏதோ கொஞ்சம் பார்த்து செய் தம்பி” அம்மா.
அதிர்ந்த சகினா கதவோரம் போனாள்.
“அம்மா கொஞ்சம் உள்ள வர்றியா…?
என்னம்மா இது … கடைய விக்கணும்னு! இப்ப என்ன?
“விக்காம என்ன பண்ண? மூத்தது ஆணா பெத்திருக்கேன், கடை ஆளுங்க போயாச்சு. விசே~ காலம் நெருங்குறதாலே நேத்துக்கூட அந்த மூணு ஜவுளிக்கடையிலேந்தும் துணி அனுப்பட்டுமான்னு … ஆர்டர் லட்டர் வந்தது தெரியுமில்லே…?”
“அது சரிம்மா… இது அந்த காலத்துலே தாத்தா வாங்கிப் போட்ட இடம், மனையே அரை லட்சத்துக்கு மேலே.. அத்தா கிட்ட கேட்காம… சரி, இந்தப் பணத்த வச்சி என்ன செய்வே?” Read the rest of this entry »