Reblogged from நாகூர் மண்வாசனை:
("வெதை (விதை) ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்?” என்று நம்மூரில் பழமொழி சொல்வார்கள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதைப்போல என் நண்பன் நெளஷாத் அலி பற்றி "பூவின் மணம் பரப்பும் காற்று" என்ற தலைப்பில் தினகரன் வாரமஞ்சரியில் விசு கருணாநிதி எழுதிய கட்டுரை இது - அப்துல் கையூம்)
நாகூர் ஈ.எம். ஹனீபாவின் மகனைப் பார்த்தேன். அப்பாவைப் போலவே ‘ஹை’ பிச்சில் பிய்த்து உதறுகிறார் என்று அலுவலகத்தில் கூறினேன். உடனடியாக ஏற்றுக்கொள்ளத் தயங்கியவர்களாய் ‘அப்படியா!’ என்றார்கள்!
எதனையும் நம்பிக்கையுடன் சொல்லும் சுஐப்புக்கும் நம்ப முடியவில்லைபோலும், கவனம் வேறெங்கோ போக வாய் மட்டும் ‘ஹாங்!’ என்றது.






