சன் குழும சேனல்களை ஒலிபரப்புவதற்கு தமிழக அரசின் அரசு கேபிள் டிவி, சன் டிவியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இனி அரசு கேபிள் டிவியில் சன் நிகழ்ச்சிகளும் ஒலிப்பரப்பாகும். கடந்த ஒரு ஆண்டுகளாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடந்த 26ந்தேதி இது தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக திங்களன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தப்படி சன் டிவி தனது குழுமத்தின் அனைத்து சேனல்களையும் அரசு கேபிள் டிவிக்கு வழங்க, அரசு கேபிள் டி மாநிலம் முழுவதும் உள்ள தனது சந்தாதாரர்களுக்கு ஒலிபரப்பும். இதற்காக அரசு கேபிள் டிவி மாதம் 2 கோடி ரூபாய் சன் டிவிக்கு செலுத்தும். திமுக ஆட்சியின் போது மாறன் சகோதரர்களோடு ஏற்பட்ட பிணக்கில், கருணாநிதி அரசு கேபிள் டிவியை தொடங்கினார். பின்னர் குடும்ப சண்டை முடிவுக்கு வந்தவுடன் அரசு கேபிள் டிவி கிடப்பில் போடப்பட்டது.
Source : http://www.inneram.com/news/tamilnadu-news/2012-08-02-04-31-13-5406.html







m.s.francis pandiaraj
August 2, 2012 at 2:29 pm
thahil naaddu makkazhukku nalla seyithi