RSS

Monthly Archives: September 2011

கனிமொழிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று செய்தி போடாதவரை மகிழ்ச்சி – கருணாநிதி!

கனிமொழிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியிடாதவரை மகிழ்ச்சியே என்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கனிமொழி மீது தற்போது சி.பி.ஐ. சாற்றியிருக்கின்ற குற்றச்சாட்டு, பத்தாண்டுகள் தண்டனைக்குரியது என்று இன்று மாலைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்களே? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு
”மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். அவர்கள் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுபோடவில்லை. அதுவரை மகிழ்ச்சி.” என்று பதில் அளித்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகளுக்குப் பதிலாக பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக மாறி தீர்ப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
Source : http://www.inneram.com/

 

Tags:

ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி?

நம்முடைய பதிவுகளில் சில நேரங்களில் ஆடியோ, வீடியோ, பிடிஎஃப், பவர்பாய்ன்ட் போன்ற ஃபைல்களை இணைக்க விரும்புவோம். ப்ளாக்கரில் Default-ஆக அந்த வசதி இல்லை. அவற்றை நம் பதிவுகளில் இணைப்பது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

Read the rest of this entry »

 

பின் தங்கிய சிறுமியிடமிருந்து …..by ஃபஹீமாஜஹான்

மேசைமீது உருண்டோடும் பென்சிலை
“ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்

வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்

எனது குறைபாடுகளை நீங்கள்
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில்
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
புறந்தள்ளிவிட்டு
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்

Read the rest of this entry »

 

Tags:

பத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள் – இலவமாகப் பதிவிறக்கம்

பத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள்

இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறுவட்டு – 4

3. பட்டினப்பாலை

இந்த இணைப்பினைச் சொடுக்கவும். http://ta.cict.in/node/51

 

Tags:

காதல் வேண்டும்….

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ..

மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய் ஆஆஆஆஆ
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ..
Read the rest of this entry »

 

Tags:

விருப்ப சேனல்கள், தரமான சிக்னல் இல்லை! அரசு கேபிள் டிவி புறக்கணிப்பு

சென்னை: மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் மக்கள் விரும்பும் சேனல்கள் இல்லாததால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறிப்பாக பெண்கள் கொந்தளித்து போயுள்ளனர். இதனால், கேபிள் ஆபரேட்டர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்து வருகின்றனர்.
அரசு கேபிள் டிவி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் ஒளிபரப்பில் மக்கள் விரும்பி பார்த்து வந்த கட்டண சேனல்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் கடிதம், ஃபேக்ஸ் மூலமும் நேரிலும் மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டு வருகின்றனர்.  மேலும் ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். Read the rest of this entry »
 

Tags:

விருப்ப சேனல்கள், தரமான சிக்னல் இல்லை! அரசு கேபிள் டிவி புறக்கணிப்பு

சென்னை: மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் மக்கள் விரும்பும் சேனல்கள் இல்லாததால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறிப்பாக பெண்கள் கொந்தளித்து போயுள்ளனர். இதனால், கேபிள் ஆபரேட்டர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்து வருகின்றனர்.
அரசு கேபிள் டிவி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் ஒளிபரப்பில் மக்கள் விரும்பி பார்த்து வந்த கட்டண சேனல்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் கடிதம், ஃபேக்ஸ் மூலமும் நேரிலும் மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டு வருகின்றனர்.  மேலும் ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். Read the rest of this entry »
 

Tags:

YouTube உங்கள்திரை


YouTube என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? “நீ குழல்” என்பது நேரடி மொழிப்பெயர்ப்பு என்பது என் கருத்து. “குறுந்திரை”, “குறுங்காணொளி” இவைகள் பொருத்தமானதாக உள்ளனவா?

நல்லதொரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். கலிஃபோர்னியா கவியரங்கத்திலேயே இதுபற்றிப் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் நேரம் கருதி பேசவில்லை.

கவிஞர் டில்லிதுரை ‘நீ-குழல்’ என்று மொழிபெயர்த்தார். மொழி பெயர்த்தார் என்பதைவிட சொல் பெயர்த்தார் என்பதுதான் சரி. மொழி மாற்றம் செய்யும்போது மொழியாக்கம் ஆவதுதான் சிறப்பு. கருத்தை உள்ளிழுத்துக்கொண்டு நம் மொழிக்கும் இயல்புக்கும் புரிதலுக்கும் ஏற்ப ஒரு புதுச்சொல்லை உருவாக்க வேண்டும். அப்படி ஆக்கப்படுவதுதான் மொழியாக்கம்.

”மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம், பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும், சிதையாமல் மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும் வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு செத்துப்போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.” என்று தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழியாக்கம் செய்த திரு. ஜெயபாரதனின் நூலுக்கான என் அணிந்துரையில் எழுதினேன்.

நீ-குழல் என்ற சொல்பெயர்ப்புக்கு என் பாராட்டு அதன் நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே. சரி, YouTube என்பதை எப்படி மொழியாக்கம் செய்யலாம். இதோ என் சிறு முயற்சி.

Tube என்பது எதைக் குறிக்கிறது? தொலைக்காட்சி என்பதை ’ட்யூப்’ என்று தெரு வழக்கில் கூறும் வழக்கம் ஒன்று உண்டு. அப்படியாய் இது வந்திருக்கலாம். அல்லது அறிவியல் வழியில் சிந்தித்தாலும், Cathode Ray Tube – CRT என்பதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் காட்டப் பயன்படுத்தப்படும் கருவி. அப்படிப்பார்த்தாலும் அது தொலைக்காட்சியையே குறிக்கிறது.

என்றால் “உன்-தொலைக்காட்சி” என்று YouTube ஐ மொழிமாற்றம் செய்யலாம். ஆனால் அது அத்தனை சுகமானதாய் எனக்குப்படவில்லை. என்றால் இந்தப் பொருள் வரும்படியாய் ஒவ்வொரு சொற்றொடராய் நாம் முயலலாம். முதலில் உன் என்பதை தமிழின் மறபுக்கு ஏற்ப உங்கள் என்று மாற்றிக்கொள்வோம்.

உங்கள் காட்சி
உங்கள் படம்
உங்கள் திரை

இதில் உங்கள்திரை என்பது கொஞ்சம் எளிமையாகவும் பொருள் தருவதாகவும் சுகமாகவும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

YouTube உருவாக்கப்பட்டதே நமக்காக நம்முடைய காணொளிகளை வெளியிடுவதற்காகத்தான். ”உங்கள் விருப்பம்” என்ற நிகழ்ச்சியைப்போல் இது உங்கள்திரை. அப்படியான நம் திரையை நாம் ஊருக்குக் காட்டி மகிழ்கிறோம்.

குறுந்திரை, குறுங்காணொளி என்பன நல்ல மொழிபெயர்ப்புகள்தாம் என்றாலும் சின்னத்திரை என்பதன் தொடர் சொல்லாட்சியாகத்தான் படுகிறது.

ஆகவே YouTube என்பதை உங்கள்திரை என்று கூறலாம் அல்லது உங்கள்காணொளி என்றும் கூறலாம் அல்லது இரு சொற்களையுமே இடம்பார்த்துப் பயன்படுத்தலாம்.

Source : http://anbudanbuhari.blogspot.com

Read the rest of this entry »

 

Tags: ,

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தமிழகத் தீர்மானம்!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தமிழகத் தீர்மானம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம், இப்போது தேசிய அளவில் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும், இதே போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழக சட்டப்பேரவை தீர்மானம் குறித்து, டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு ஆதரவாக தமிழக சட்டப்பேரவையைப் போல காஷ்மீர் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினால், இப்போது இருப்பதைப் போல பா ஜ கவினர் அமைதியாக இருப்பார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தப் பிரச்சினையை வைத்து உமர் அப்துல்லா அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகக் குற்றம் சாட்டியது. அதற்காக, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இதுகுறித்து பிபிசியிடம் கருத்துத் தெரிவித்த உமர் அப்துல்லா, “நான் டுவிட்டரில் தெரிவித்தது என்னவென்றால், தமிழக சட்டப்பேரவையைப் போல காஷ்மீர் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினால், நிலைமை அமைதியாக இரு்க்குமா என்பதுதான்” என்று கூறினார்.

“அஃப்சல் குரு குற்றமற்றவர் என்று நான் சொல்லவில்லை. அஃப்சல் குருவை தூக்கில் போடக்கூடாது என நான் சொல்லவில்லை. சட்டப்படி நடக்கக்கூடாது என நான் சொல்லவில்லை. குடியரசுத் தலைவர் எடுத்த அல்லது எடுக்காத எந்த முடிவு குறித்தும் நான் உள்நோக்கம் கற்பிக்கவில்லை. நான் சொல்வதெல்லாம், தமிழ்நாட்டைப் போல காஷ்மீர் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் பாஜக சும்மா இருக்குமா என்பதுதான்” என்றும் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்குப் பதிலாக, ராம்ஜெத்மலானி அவர்கள் அஃப்சல் குருவுக்கு ஆதரவாக ஆஜராகியிருந்தால், பாஜக என்ன சொல்லியிருக்கும் எனவும் அப்துல்லா வினவினார்.

அஃப்சல் குருவின் தண்டனையை குறைக்குமாறு அவரது தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்று கேட்டபோது, கட்சியின் சார்பில் தான் பேச முடியாது என்று தெரிவித்தார் உமர் அப்துல்லா.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் சட்டமன்றத்திலும் தீர்மானம் வரக் கூடும்

அதே நேரத்தி்ல், காஷ்மீரைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ என்ஜினியர் ரஷீத் என்பவர், அஃப்சல் குருவின் தண்டனையை குறைக்கக் கோரி, பேரவைத் தலைவரிடம் மனுக்கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். அத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தால், ஆளுங்கட்சி அதிலிருந்து விலகி நிற்பது கடினமாகிவிடும் என நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே, பஞ்சாப் மாநிலத்திலிருந்தும் இதேபோன்ற கோரிக்கை வந்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு டெல்லியில், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவைக் கொல்ல முயன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தேவிந்தர் பால்சிங் புல்லரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்.

இதனிடையே, கருணை மனுக்களை விரைந்து பரிசீலனை செய்ய அரசு முயற்சி எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

Source: http://www.nidur.info

 

Tags:

 
Follow

Get every new post delivered to your Inbox.